Published : 09 Aug 2019 07:47 AM
Last Updated : 09 Aug 2019 07:47 AM

20 ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்: சென்னை காவல் ஆணையர் உத்தரவு

சென்னை

சென்னையில் பணியாற்றும் 20 காவல் ஆய்வாளர்களை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பணியிட மாற்றம் செய்துள்ளார்.

அதன்படி, காத்திருப்போர் பட்டியலில் இருந்த பாலகுமாரன் வியாசர்பாடிக்கும், சீதாராமன் திருவல்லிக்கேணிக்கும், ராஜா பால் பாண்டிபஜாருக்கும், தமிழழகன் வில்லிவாக்கத்துக்கும், தாம்சன் சேவியர் எம்.ஜார்ஜ் ராயலா நகருக்கும், விஜயலட்சுமி ஓட்டேரிக்கும், பிரேமா கே.கே.நகர் காவல் நிலையத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர். குற்ற ஆவணக் காப்பக பிரிவில் இருந்த டி.ஜெயசுதா நுண்ணறிவு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். இவர்கள் உட்பட மொத்தம் 20 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x