

சென்னை
மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து தி.நகர் சத்யாவை நீக்க வலியுறுத்தி, தென்சென்னை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் அதிமுக அலுவலகத்தை முற்றுகை யிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுகவில் நிர்வாக ரீதியாக பிரிக்கப்பட்ட தென்சென்னை வடக்கு மாவட்டச் செயலாளராக இருப்பவர் தி.நகர் சத்யா. தியாகராய நகர் தொகுதி எம்எல்ஏ வான இவர், தனக்குப் பிடிக் காதவர்களை பொறுப்புகளில் இருந்து நீக்குவதாக அதிமுக தலைமை அலுவலகத்தில், நீக்கப்பட்டவர்கள் புகார் அளித்து வந்தனர். இதுதொடர் பாக முதல்வர் பழனிசாமி வீட்டை முற்றுகையிடும் போராட்டத்தையும் நடத்தினர்.
இந்நிலையில், எஸ்.எம்.கே. முகமதுஅலி ஜின்னா, வழக்கறிஞர் ராஜ்குமார் உள் ளிட்டோர் தலைமையில், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர், ராயப் பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தை நேற்று முற்றுகை யிட வந்தனர். தகவல் அறிந்து அங்கு அதிக அளவில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.
ஊர்வலமாக வந்த முன்னாள் நிர்வாகிகள் மற்றும் தொண்டர் களை, அவ்வை சண்முகம் சாலை, கவுடியா மடம் சாலை சந்திப்பில் போலீஸார் தடுத்து நிறுத்தினர். பின் னர் அவர்கள் அதிமுக அலுவலகம் வர அனுமதிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து, அதிமுக அலுவலகத் தில் தலைமைக் கழக மேலாளர் மகாலிங்கத்திடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் முன்னாள் நிர்வாகிகள் கூறிய தாவது:
தி.நகர் சத்யாவால் கட்சியின் பெயர் கெடுகிறது. கட்சிக்கு உண் மையாக உழைப்பவர்களை நீக்கி விட்டு, தனக்குத் தெரிந்தவர்கள், மாற்றுக்கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து பெரிய பொறுப்புகளை அளிக்கிறார். இதுதொடர்பாக தலைமை நடவடிக்கை எடுத்து, மாவட்டச் செயலாளர் சத்யாவை நீக்க வேண்டும் என்பதற்காக போராட்டம் நடத்தினோம். தலைமைக் கழக நிர்வாகி மகாலிங்கத்திடம் புகார் மனு அளித்து, சில தகவல்களையும் தெரிவித்துள்ளோம்.
இதுதொடர்பாக ஒருங்கிணைப் பாளர், இணை ஒருங்கிணைப் பாளரிடம் தகவல் அளித்துள்ளதாக வும், புகாரை விசாரிக்க ஐவர் குழு நியமித்துள்ளதாகவும், அவர் கள் வரும் 14-ம் தேதி விசாரணை நடத்துவார்கள் என்றும் மகாலிங் கம் தெரிவித்தார். இதன் அடிப் படையில் நாங்கள் கலைந்து செல்கிறோம். விரைவில் நல்ல தகவல் கிடைக்கும் என்று நம்பு கிறோம். இல்லையெனில் சத் யாவை நீக்கும் வரை தொடர்ந்து போராடுவோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.