Published : 07 Aug 2019 09:15 AM
Last Updated : 07 Aug 2019 09:15 AM
சென்னை
தேசிய மருத்துவ ஆணையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழு வதும் அரசு மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் 2-ம் நாளாக நேற்று வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு (எம்சிஐ) பதிலாக தேசிய மருத்துவ ஆணையத்தை (என்எம்சி) கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப் பட்டுள்ளது. இதற்கு நாடு முழு வதும் மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தேசிய மருத் துவ ஆணைய மசோதாவுக்கு குடி யரசுத் தலைவர் ஒப்புதல் வழங் கக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் சார்பில், தமிழகம் முழு வதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிக்கும் மாணவ, மாணவிகள் கடந்த 2-ம் தேதி போராட்டம் நடத்தினர். இதன் தொடர்ச்சியாக 5-ம் தேதி வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்ணா, ஆர்ப்பாட்டம்
இந்நிலையில், சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, விழுப்புரம், திருச்சி உட்பட தமி ழகம் முழுவதும் உள்ள பல்வேறு அரசு மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகளும் 2-ம் நாளாக நேற்றும் வகுப்புகளை புறக்கணித்து தர்ணா, ஆர்ப்பாட்டம், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கண்களில் கருப்புத் துணி
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் கண்களில் கருப்புத் துணி கட்டி போராட்டம் செய்தனர்.
இதுதொடர்பாக மருத்துவ மாணவர்களிடம் கேட்டபோது, “தேசிய மருத்துவ ஆணையத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங் கக் கூடாது. இந்திய மருத்துவ கவுன்சிலை ஒழிக்கக் கூடாது. மாநில உரிமைகளை பறிக்கும் நெக்ஸ்ட் தேர்வை திணிக்கக் கூடாது. வரைவு தேசிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடு பட்டுள்ளோம். கோரிக்கை நிறை வேறும் வரை போராட்டம் தொட ரும்” என்றனர்.
முதல்வருக்கு வேண்டுகோள்
இதற்கிடையில், சமூக சமத்து வத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.ஆர்.ரவீந் திரநாத், சென்னையில் செய்தி யாளர்களிடம் நேற்று கூறியதாவது:
நாடாளுமன்றத்தில் நிறைவேற் றப்பட்டுள்ள தேசிய மருத்துவ ஆணைய மசோதா கூட்டாட்சிக் கோட்பாட்டுக்கும், மருத்துவக் கல்வியில் நிலவும் மதச்சார்பின் மைக்கும் எதிரானது. இந்த மசோ தாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக் கணித்து போராட்டம் நடத்தி வரு கின்றனர்.
அவர்களை அழைத்து தமிழக முதல்வர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இது மருத்துவ மாணவர்களின் தனிப்பட்ட பிரச் சினை அல்ல. மக்களின் பிரச்சினை.
அதேபோல, வரைவு தேசிய கல்விக் கொள்கை - 2019 குறித்து விவாதிக்க, அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு உடனே கூட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT