Published : 06 Aug 2019 06:04 PM
Last Updated : 06 Aug 2019 06:04 PM
ஒய்.ஜி.மகேந்திரனின் தாயாரும் கல்வியாளருமான ராஜலட்சுமி பார்த்தசாரதி வயது முதிர்வு காரணமாக இன்று (ஆகஸ்ட் 6) சென்னையில் காலமானார். அவருக்கு வயது 93.
சமூக ஆர்வலரான ராஜலட்சுமி பார்த்தசாரதி செய்தியாளராகவும் சிறந்த கல்வியாளராகவும் திகழ்ந்தவர். பத்ம சேஷாத்ரி பால பவன் குழும கல்வி நிறுவனங்களை நிறுவி, சிறப்பாக வழிநடத்தியவர்.
தன்னுடைய கல்விப் பணிக்காக 2010-ல் பத்ம ஸ்ரீ விருது பெற்றார். இவரின் கணவர் ஒய்.ஜி.பார்த்தசாரதி புகழ்பெற்ற நடிகர் மற்றும் நாடகக் கலைஞர் ஆவார்.
ராஜலட்சுமி பார்த்தசாரதியின் உடல், தியாகராய நகரில் உள்ள அவரின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
ராஜலட்சுமி பார்த்தசாரதியின் இறுதிச் சடங்கு நாளை (ஆக.7) மாலை பெசன்ட் நகரில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT