Published : 04 Aug 2019 03:25 PM
Last Updated : 04 Aug 2019 03:25 PM

அத்திவரதரை ஸ்டாலினும் தரிசிக்க வருவார்: தமிழிசை

அத்திவரதரை ஸ்டாலினும் தரிசிக்க வருவார் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் அத்திவரதர் வைபவம் நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் அருள்பாலித்து வருகிறார்.

இந்நிலையில், வேலூர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் அத்திவரதரை தரிசனம் செய்தார். அதேபோல பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் அத்திரவரதரைத் தரிசனம் செய்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''திமுக தலைவர் ஸ்டாலினும் விரைவில் அத்திவரதரைத் தரிசிக்க வருவார். 

திமுகவைச் சேர்ந்த ஒருவர்கூட நாத்திகவாதி கிடையாது. ஸ்டாலின் கூட நாத்திகர் கிடையாது. அவருக்கு எல்லா நம்பிக்கைகளும் இருக்கின்றன. அதனால்தான் ஸ்டாலின், அவரின் தாய், மனைவி மூலம் இறை நம்பிக்கைகளைப் பூர்த்தி செய்துகொள்கிறார். அதனை நான் வரவேற்கிறேன். விமர்சிக்கவில்லை. 

அதேபோல ஸ்டாலினும் அத்திவரதரை நேரடியாகத் தரிசிக்கும் காலம் விரைவில் வரும். ஏனெனில் தொண்டர்கள் எல்லோரும் மாறிவிட்டார்கள். அவர் மட்டும்தான் பிடித்து இழுத்துக்கொண்டிருக்கிறார். அவரும் வெளிப்படையாக வருவதற்கான காலம் வெகு தொலைவில் இல்லை.    

தொண்டர்கள் வழிதான் தனது வழி என்று சொல்லிக் கொண்டிருகிறார். தொண்டர்கள் எல்லோரும் மாறிவிட்டார்கள். அப்படியெனில் இனி அவரும் மாற வேண்டியதுதானே? ஸ்டாலின் வரட்டும்; வந்து அத்திவரதரை தரிசிக்கட்டும்'' என்றார் தமிழிசை. 

முன்னதாக, அத்திவரதரை ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள் ஆகியோர் தரிசித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x