Published : 31 Jul 2019 06:01 PM
Last Updated : 31 Jul 2019 06:01 PM

குன்னூர் ரண்ணிமேடு ரயில் நிலையத்தில் தண்டவாளம் அருகே சுற்றி வரும் காட்டு யானைகள் 

சுற்றித் திரியும் யானைகள்

குன்னூர் 

குன்னூர் அருகே ரண்ணிமேடு ரயில் நிலையம் அருகில் சுற்றி வரும் காட்டு யானைகளை தொந்தரவு செய்யக் கூடாது என வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள ரண்ணிமேடு ரயில் நிலையம் பகுதியில் கடந்த சில நாட்களாக  பேரிக்காய், பலாப்பழம் உள்ளிட்ட பழ வகைகளை உண்பதற்காக யானைகள் கூட்டம் அவ்வப்போது வந்து செல்கிறது. 

இந்நிலையில், இப்பகுதியில் தொடர்ந்து 2 நாட்களாக முகாமிட்டுள்ள யானைகள் பழ சீசன் முடிந்ததும் தானாகவே மேட்டுப்பாளையம் வனப்பகுதிக்கு சென்றுவிடும் என்பதால் இந்த யானைகளை எந்த விதத்திலும் யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

இருப்பினும் யானைகள் ரயில் தண்டவாளம் செல்லும் குகைக்குள் சென்று தஞ்சம் அடைந்து விடாமல் இருக்க வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து  வருகின்றனர்.

ஆர்.டி.சிவசங்கர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x