

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் அத்திவரதர் சயனக் கோலத்தில் காட்சி தரும் நிகழ்வு இன்றுடன் நிறைவு பெறுகிறது. அத்திவரதரை காணவரும் பக்தர் கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதால் அவர்கள் இளைப் பாறிச் செல்வதற்கான கொட்ட கைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
காஞ்சிபுரம் வரதராஜப் பெரு மாள் கோயிலில் தினம்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சயனக் கோலத் தில் இருக்கும் அத்திவரதர் தரிசனம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
நாளை முதல் நின்ற கோலத்தில் அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சி அளிக்கவுள்ளார். இதையொட்டி இன்று நண்பகல் 12 மணியுடன் கிழக்கு கோபுரக் கதவுகள் மூடப் படும். மாலை 5 மணியுடன் தரிசனம் நிறைவடைகிறது.
முக்கிய பிரமுகர்களுக்கான அனுமதி அட்டை வைத்துள்ள வர்கள் மாலை 3 மணிக்கு மேல் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று காஞ்சிபுரம் ஆட்சியர் அறிவித் துள்ளார்.
அத்திவரதர் நேற்று மஞ்சள் மற்றும் இளநீலப் பட்டாடை அணிந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பொது தரிசன வரிசையில் 7 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். முக்கிய பிரமுகர்கள் 2 மணி முதல் 3 மணி நேரம் வரை காத்திருந்து அத்திவரதரை தரிசனம் செய்தனர்.
பெரிய கொட்டகை
சயனக் கோலத்தில் இருந்த தைவிட நின்ற கோலத்தில் நிற்கும் அத்திவரதரை காண்பதற்காக மேலும் அதிக பக்தர்கள் வரு வார்கள் என எதிர்பார்ப்பு இருப்ப தால், பொது தரிசன நேரத்தை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ள தாக கூறப்படுகிறது.
மேலும் வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்கும் பக்தர்கள் இளைப்பாறும் வகையில், 10 ஆயிரம் பேர் அமரும் வகையில் பெரிய கொட்டகை அமைக்கப்பட்டு வருகிறது. கோயிலுக்கு அருகில் உள்ள அண்ணா அவென்யூ, வாழைத்தோப்பு ஆகிய 2 இடங் களில் இந்த கொட்டகை அமைக் கும் பணி நடைபெற்று வருகிறது.