Published : 30 Jul 2019 11:03 AM
Last Updated : 30 Jul 2019 11:03 AM

புற்றுநோய் பாதித்த அரசு ஊழியர்களுக்கு கீமோ, ரேடியோ தெரபிக்கு 10 நாள் சிறப்பு விடுப்பு: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு 

சென்னை

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு அவர்கள் பணிக்காலத்தில் அதிக பட்சமாக 540 நாட்கள் மருத்துவ விடுப்பு அனுமதிக்கப்படுகிறது. ஆனால், அவர்கள் ஒரே நேரத்தில் அந்த விடுப்புகளை எடுத்துக் கொள்ள அனுமதியில்லை.

ஆனால், புற்றுநோய் உள்ளிட்ட சில நோய்களால் பாதிக்கப்பட்ட வர்கள் அதிக நாள் விடுப்பு எடுக்க வேண்டி வரும். இதுதவிர கீமோ தெரபி, ரேடியோ தெரபி உள்ளிட்ட சிகிச்சைகள் மேற்கொள்ளும் போது, மருத்துவ விடுப்பு எடுப் பதில் சிரமங்கள் ஏற்படும். இப் பிரச்சினையை தவிர்க்கும் வகை யில், அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுப்பு அனுமதிக்கப்படுகிறது.

சின்னம்மை, விஷக்கடி உள் ளிட்ட சில பிரச்சினைகளுக்கு இது போன்ற குறிப்பிட்ட நாட்கள் சிறப்பு விடுப்புகள் வழங்கப்படுகின்றன.

சம்பளத்துடன் விடுப்பு

அந்த வகையில், சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில், தமிழக பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத் தத்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில், ‘‘புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அரசுப் பணியாளர் களின் நலனை கருத்தில் கொண்டு தற்போது அனுமதிக்கப்பட்ட விடுப்புகளுடன், கீமோ தெரபி மற்றும் ரேடியோ தெரபி கிகிச்சை பெறும் ஒவ்வொரு முறையும் அவர்களுக்கு முழு ஊதியத்துடன் 10 நாட்கள் சிறப்பு விடுப்பு எடுக்கப்படும்’’ என்றார்.

இந்நிலையில் இந்த அறிவிப்பு தொடர்பான அரசாணை வெளியி டப்பட்டுள்ளது. இந்த அரசாணை யில், பொது சுகாதாரத்துறை இயக்குநர் பரிந்துரைப்படி, கீமோ தெரபி அல்லது ரேடியோ தெரபி சிகிச்சை பெறும் அரசு ஊழியர்களுக்கான 10 நாள் சிறப்பு விடுப்பானது. சிகிச்சை எடுத்துக் கொள்ளும் நாளுக்கு முந்தைய நாள், சிகிச்சை எடுத்துக் கொள்ளும் நாள் மற்றும் அந்த சிகிச்சையில் இருந்து முழுமையாக குணம் பெற 8 நாட்கள் என்ற அடிப்படையில் வழங்கப்படுவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x