‘மருத்துவமனை தினம்’ இன்று கொண்டாட்டம்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை

முத்துலட்சுமி ரெட்டி பிறந்த தினமான இன்று, அரசு மருத்துவ மனைகளில் ‘மருத்துவமனை தினம்’ கொண்டாடப்படுகிறது.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த தினமான ஜூலை 30-ம் தேதி மருத்துவமனை தினமாக கொண்டாடப்பட உள்ளது. புதுக் கோட்டை மாவட்டத்தில் பிறந்த முத்துலட்சுமி ரெட்டி, சென்னை மருத்துவக் கல்லூரியில் 1907-ம் ஆண்டு படித்தார். சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவ மனை தொடங்க காரணமாக இருந்துள்ளார். பல்வேறு சமூகப் பணிகளை செய்துள்ளார். தமிழக சட்டப்பேரவையின் முதல் பெண் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

நிதி ஒதுக்கீடு

இவரது பிறந்த தினமான ஜூலை 30-ம் தேதி, மருத்துவமனை தினமாக இந்த ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது. இதற் காக ஒவ்வொரு அரசு மருத்துவ மனைக்கும் நிதி ஒதுக்கீடு செய்து, குழுவும் அமைக்கப்பட் டுள்ளது. மருத்துவமனை பணி யாளர்கள், தங்கள் குடும்பத்தின ருடன் கலந்துகொள்வர்.

இவ்வாறு அமைச்சர் தெரிவித் துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in