Published : 30 Jul 2019 09:25 AM
Last Updated : 30 Jul 2019 09:25 AM

பணி திறனாய்வு போட்டியில் சாம்பியன் கோப்பை: காவல் துறையினருக்கு முதல்வர் வாழ்த்து

சென்னை

அகில இந்திய காவல் பணி திறனாய்வு போட்டியில் சாம்பியன் கோப்பையை வென்ற தமிழக காவல் துறையினர், முதல்வர் பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் 62-வது அகில இந்திய காவல் பணி திறனாய்வு போட்டிகள் நடந்தன. இதில் தமிழக காவல் துறையினர் 4 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்களை பெற்று முதலிடம் பிடித்தனர். தங்கப் பதக்கம் வென்ற காவல் ஆய்வாளர் ஜான்விக்டர், காவலர் ஏ.மார்ட்டின் (மோப்பநாய் பயிற்சியாளர்), முதுநிலை காவலர் முருகானந்தம், தங்கம், வெள்ளிப் பதக்கங்கள் வென்ற உதவி ஆய் வாளர் எஸ்.விஜய், வெள்ளிப் பதக் கங்கள் வென்ற உதவி ஆய்வாளர் எஸ்.ஏ.வீராசாமி, காவலர் பி.லோக நாதன், தலைமைக் காவலர் ஏ.முரளிதரன், வெண்கலப் பதக் கங்கள் வென்ற உதவி ஆய்வாளர் கே.விக்னேஷ் பிரபு, காவலர் என்.ஜெயராஜ், காவல் ஆய்வாளர் கே.அருணா ஸ்ரீ, உதவி ஆய்வாளர் ஜெ.இந்துமதி, அறிவியல் சார்ந்த புலனாய்வு திறன் போட்டி யில் ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை வென்ற அணியின் தலைவரான கூடுதல் காவல் கண் காணிப்பாளர் எஸ்.ஆறுமுகசாமி உள்ளிட்டோர் தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமியை நேற்று சந்தித்து வாழ்த்துபெற்றனர்.

அதேபோல, ஆஸ்திரேலியா வில் நடந்த 2019-ம் ஆண்டுக்கான காமன்வெல்த் பளுதூக்குதல் சாம் பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தஞ்சாவூர் மாவட் டம் தோகூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பி.அனுராதாவும் முதல் வரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x