ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாக்டர்கள் ஒத்துழையாமை போராட்டம்: அரசு மருத்துவமனைகளில் நிர்வாக பணிகள் முடக்கம் 

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாக்டர்கள் ஒத்துழையாமை போராட்டம்: அரசு மருத்துவமனைகளில் நிர்வாக பணிகள் முடக்கம் 
Updated on
2 min read

சென்னை

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக் கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அரசு டாக்டர்கள் ஒத்துழையாமை இயக்க போராட்டத்தை தொடங்கி யுள்ளனர். இதனால், தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனை களில் நிர்வாகப் பணிகள் முடங் கியுள்ளன.

தமிழகத்தில் அரசு மருத்துவ மனைகளில் பணியாற்றும் டாக்டர்களுக்கு காலம் சார்ந்த பதவி உயர்வு மற்றும் ஊதியம் வழங்க வேண்டும். இந்திய மருத்துவ கவுன்சில் (எம்சிஐ) விதிப்படி, மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகளில் டாக்டர்களின் எண் ணிக்கையை குறைக்கக் கூடாது. நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப டாக்டர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்துள்ள அரசு மருத்துவர் களுக்கு பணியிட கலந்தாய்வு நடத்த வேண்டும். அரசு மருத்துவர்க ளுக்கு முதுநிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவக் கல்வியில் ஏற்கெனவே இருந்த 50 சதவீத இடஒதுக்கீட்டை தமிழக மக்களின் நலன்கருதி மீண்டும் வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தி அரசு டாக்டர் கள்தொடர்ந்து பல்வேறு போராட் டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இதுவரை தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

இதையடுத்து, அரசுக்கு அழுத் தம் கொடுப்பதற்காக அரசு டாக் டர்கள் ஒன்றாக இணைந்து தமிழ் நாடு அரசு டாக்டர்கள் கூட்ட மைப்பை தொடங்கினர். ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம், அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம், அனைத்து அரசு டாக்டர்கள் சங்கம், சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

இந்த கூட்டமைப்பில் எடுக்கப் பட்ட முடிவின்படி, தமிழகம் முழு வதும் அரசு டாக்டர்கள் ஒத்துழை யாமை இயக்க போராட்டத்தை நேற்று தொடங்கினர். பயிற்சி முகாம்கள் நடத்துவது, நோயாளி களின் விவரங்களை அனுப்புவது, பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் பணி உள்ளிட்ட அனைத்து பணி களையும் நிறுத்தினர்.

இதேபோல் மாதந்தோறும் நடத்தப்படும் இறப்பு ஆய்வுக் கூட்டத்தையும் புறக்கணித்தனர். டாக்டர்களின் ஒத்துழையாமை இயக்க போராட்டத்தால் தமி ழகம் முழுவதும் அரசு மருத்துவ மனைகளில் நிர்வாகப் பணி கள் முற்றிலுமாக முடங்கியுள் ளன.

இதுதொடர்பாக அரசு டாக்டர் களிடம் கேட்டபோது, ‘‘டாக்டர் களின் ஒத்துழையாமை இயக்க போராட்டத்தால் அரசு மருத்துவ மனைகளில் நிர்வாகப் பணிகள் முடங்கியுள்ளன. கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் அடுத்த கட்டமாகஆகஸ்ட் 9-ம் தேதி யில் இருந்து முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம் செயல்படுத்துவது நிறுத் தப்படும்.

ஆக. 29-ல் வேலைநிறுத்தம்

ஏழை நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்படும். ஆனால், அரசுக்கு வருவாய் கிடைக் காது. 20-ம் தேதி தமிழகம் முழு வதும் அரசு டாக்டர்கள், அவர் களின் குடும்பத்தினர் பங்கேற்கும் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும். 23-ம் தேதி முதல் சென்னையில் அரசு டாக்டர்கள் சாகும்வரை உண்ணா விரதப் போராட்டத்தை தொடங் குவர். இறுதிகட்டமாக 27-ம் தேதி தமிழகம் முழுவதும் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும்” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in