Published : 26 Jul 2019 07:57 PM
Last Updated : 26 Jul 2019 07:57 PM
சமீபத்தில் பிரிக்கப்பட்ட செங்கல்பட்டு, தென்காசி மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகளாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காஞ்சிபுரம், திருநெல்வேலி மாவட்டங்களை இரண்டாக பிரித்து செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களாகவும், தென்காசி -நெல்லை மாவட்டங்களாகவும் அறிவித்தார்.
இந்நிலையில் மேற்கண்ட மாவட்டங்களுக்கு ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் நியமிக்கப்படவேண்டும், தற்போது செங்கல்பட்டு, தென்காசி மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகளை நியமித்து தலைமைச் செயலர் சண்முகம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதன்படி சர்க்கரை ஆலைகளின் கூடுதல் இயக்குனர் அருண் சுந்தர் தயாளன் செங்கல்பட்டு மாவட்ட சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்படும் பணிகளில் வருவாய்த்துறை ஆணையருடன் இணைந்து செயல்படுவார்.
இதேப்போன்று தென்காசி மாவட்ட சிறப்பு அதிகாரியாக, தமிழ்நாடு கடல்வாரிய தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அலுவலரான ஜான் லூயிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சிறப்பு அதிகாரியாக செயல்படுவதோடு, நெல்லை மாவட்டம் இரண்டாக பிரிக்கப்படும் பணிகளில் வருவாய்த்துறை ஆணையருடன் இணைந்து செயல்படுவார்.
இதற்கான உத்தரவை தலைமைச் செயலர் சண்முகம் பிறப்பித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT