Published : 07 Jul 2015 07:19 AM
Last Updated : 07 Jul 2015 07:19 AM

மெட்ரோ ரயில்: கருணாநிதிக்கு இன்று பாராட்டு விழா

மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வந்ததற்காக திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு ஆலந்தூரில் இன்று பாராட்டு விழா நடத்தப்படுகிறது.

தென்சென்னை மாவட்ட திமுக சார்பில், மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வந்ததற்காக திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு பாராட்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஆலந்தூர் நீதிமன்றம் எதிரில் உள்ள தேசிய இளை ஞர் விளையாட்டுக் கழக மைதானத்தில் இன்று மாலை 3 மணிக்கு விழா நடை பெறுகிறது. இதற்காக மெட்ரோ ரயில் வடிவில் மேடை அமைக்கப்பட்டுள்ளது.

பாராட்டு விழாவுக்கு தென் சென்னை மாவட்டச் செய லாளரும், முன்னாள் மேயரு மான மா.சுப்பிரமணியன் தலைமை வகிக்கிறார். கருணாநிதி, ஸ்டாலின், திமுக முதன்மைச் செயலாளர் துரை முருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் இக்கூட்டடத்தில் பங்கேற்கின்றனர்.

பாராட்டு உரை

திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க. ஸ்டாலின் ஆகியோரை பாராட்டி அவர்கள் உரையாற்றுகின்றனர்.

கோயம்பேடு-ஆலந்தூர் இடையேயான மெட்ரோ ரயில் திட்டத்துக்கு வித்திட்டது யார் என்பது தொடர்பாக திமுக, அதிமுக இடையே அறிக்கைப் போர் நடந்துவருகிறது.

இந் நிலையில், கருணாநிதி, ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடைபெறவுள்ளது குறிப் பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x