Published : 22 Jul 2019 08:05 AM
Last Updated : 22 Jul 2019 08:05 AM

இந்தி, சம்ஸ்கிருதத்துக்கு மட்டுமே மத்திய அரசு முக்கியத்துவம் தருகிறது: திமுக எம்.பி. கனிமொழி குற்றச்சாட்டு

சென்னை

மத்திய பாஜக அரசு இந்தி மொழிக்கு மட்டுமே முக்கியத்துவம் தருவதாக திமுக எம்.பி. கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.

மதுரையிலிருந்து நேற்று சென்னை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மத்திய அரசு இந்தியை திணிக்க வில்லை. தமிழ் வளர்ச்சிக்கான முயற்சிகளை பாஜக அரசு எடுத்து வருவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார். ஆனால், அவர் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் டில் இந்தி, சம்ஸ்கிருதம் தவிர வேறு எந்த மொழிகளின் வளர்ச் சிக்கும் நிதி ஒதுக்கப்பட வில்லை.

தமிழ் மொழியை வளர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறும் நிர்மலா சீதாராமனிடம் தமிழ் மொழி வளர்ச்சிக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது என்பதை கேட்க விரும்புகிறேன்.

இந்தி பெயர்கள்

மத்திய பாஜக அரசு இந்தி, சம்ஸ்கிருத்துக்கு மட்டுமே முக்கி யத்துவம் அளிக்கிறது. மத்திய அரசின் திட்டங்கள் அனைத்துக்கும் இந்தியில் மட்டுமே பெயர் வைக்கிறார்கள். ஆங்கிலத்தில் கூட பெயர் வைப்பதில்லை. இந்தி பெயர்களை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் மொழி பெயர்ப்பதும் இல்லை.

ஒரு நாட்டுக்கு உணவுப் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. இயற்கையை அழித்து விவ சாயத்தை இல்லாமல் செய்து விட்டால் அந்த நாடு முன்னே றாது. எனவே, விவசாய நிலங் களில் ஹைட்ரோகார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களை செயல் படுத்தக் கூடாது. அதனை தொடர்ந்து எதிர்ப்போம்.

சென்னை சேலம் 8 வழி பசுமை சாலை திட்டத்துக்கு அதிவேக விரைவு சாலை என பெயர் மாற்றப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித் துள்ளார். திட்டத்துக்கு என்ன பெயர் வைத்தாலும், விவசாயி களைப் பாதிக்கக் கூடிய, விவசாய நிலங்களைப் பறிக்கக் கூடிய எந்தத் திட்டத்தையும் திமுக ஏற்றுக் கொள்ளாது. மக்கள் நலனுக்காக திமுக தொடர்ந்து போராடும்.

இவ்வாறு கனிமொழி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x