Published : 21 Jul 2019 07:40 AM
Last Updated : 21 Jul 2019 07:40 AM

மயிலாப்பூரில் 17-வது நாடக திருவிழா தொடக்கம்; நடிகர் எஸ்.வி.சேகருக்கு விருது வழங்கி கவுரவிப்பு 

சென்னை 

சென்னை மயிலாப்பூரில் 17-வது நாடகத் திருவிழா நேற்று தொடங் கியது. இதில், நடிகர் எஸ்.வி.சேக ருக்கு ‘நாடக கலா நிபுண’ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

தி மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப் சார்பில் ஆண்டுதோறும் நாடக திருவிழா நடத்தப்பட்டு வரு கிறது. இந்த விழாவின்போது ஆண்டுதோறும் விருதுகள் வழங் கப்படுகின்றன. இந்நிலையில், 17-வது நாடகத் திருவிழா சென்னை மயிலாப்பூரில் நேற்று தொடங் கியது.

மறைந்த பிரபல நாடக ஆசிரியர் கிரேசி மோகனுக்கு 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர், தி மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப் தலைவரும், தொழி லதிபருமான நல்லி குப்புசாமி பேசும்போது, ‘‘கடந்த 1954-ம் ஆண்டு முதல் இங்கு நாடகங்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.

கடந்த 1990-ம் ஆண்டுக்குப் பிறகு நாடங்களுக்கு வர வேற்பு சற்று குறைந்தபோது, எஸ்.வி.சேகர் நாடகங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இன்னும் அவர் பல நாடகங்களை வழங்க வேண்டும்’’ என்றார்.

விழாவில் எஸ்.வி.சேகருக்கு ‘நாடக கலா நிபுண’ என்ற வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. 2 பவுன் தங்க பதக்கம் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசையும் நல்லி குப்புசாமி வழங்கினார்.

பின்னர், எஸ்.வி.சேகர் கூறும் போது, ‘‘இந்த விருது பெறுவதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. நாங்கள் அரங்கேற்றிய 25 நாடகங்களில் 19 நாடகங்கள் இங்குதான் அரங்கேற்றம் செய்யப்பட்டன. தற்போது இளைஞர்கள் புதுப் புது நாடகங்களை அரங்கேற்றி வருகின்றனர். எனவே, மக்களின் வருகை இருக்கும் வரையில் நாடகங்கள் அழியாது. கிரேசி மோகன் இறந்தாலும் அவரது எழுத்தும், புகழும் என்றென்றும் மறையாது’’ என்றார்.

இந்த விழாவில் இசை பயிற்சி யாளர் ராம்ஜி, தி மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப் துணைத் தலைவர் ரவி வைத்தியநாதன், கவுரவ செயலாளர் டி.என்.வரத ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இன்று முதல் 25-ம் தேதி வரை தினமும் மாலை 6.45 மணிக்கு நாடகங்கள் நடக்கவுள்ளன. அனுமதி இலவசம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x