Published : 20 Jul 2019 08:34 AM
Last Updated : 20 Jul 2019 08:34 AM
சென்னை
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக டி.ராஜா தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
கட்சியின் தற்போதைய தேசிய பொதுச் செயலாளரான சுதாகர் ரெட்டி, தனது உடல் நிலை மற்றும் வயோதிகம் காரணமாக பொறுப்பி லிருந்து விலக முடிவெடுத்ததாக தெரிகிறது.
இந்நிலையில் அக்கட்சி யின் தேசிய நிர்வாகக் குழுக் கூட்டம் புதுடெல்லியில் நேற்று நடைபெற்றது. அக்கூட்டத்தில், தற்போதைய தேசிய செயலாள ரான டி.ராஜா, கட்சியின் புதிய தேசிய பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியில் இன்றும், நாளை யும் நடைபெறும் கட்சியின் தேசி யக் குழுக் கூட்டத்துக்குப் பிறகு, டி.ராஜாவின் தேர்வு குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப் படும் என தெரிகிறது.
தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள டி.ராஜா, வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள சித்தாத்தூர் கிராமத் தில் பிறந்தவர். அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் தமிழ்நாடு மாநிலச் செயலாளராக பொறுப்பு வகித்த டி.ராஜா, பின்னர் அம்மன்றத்தின் அகில இந்திய பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளராக உள்ளார்.
கடந்த 2007-ம் ஆண்டு முதல் தமிழகத்தின் சார்பில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக செயல்பட்டு வருகிறார். இவரது மனைவி ஆனி, கேரளத்தைச் சேர்ந்தவர். அவர் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் பொதுச் செய லாளராக உள்ளார். இவர்களுக்கு அபரஜிதா என்ற மகள் உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT