Published : 15 Jul 2019 08:52 AM
Last Updated : 15 Jul 2019 08:52 AM

நம்மாளுங்க... நல்ல வீடா கொடுங்கோ..!

மக்களவையின் புதிய எம்பி-க்களுக்கு டெல்லியில் இன்னும் அரசு குடியிருப்புகள் ஒதுக்கப்படவில்லை. இதற்கான பணிகளைக் கவனிக்கும் குழுவின் தலைவராக குஜராத்தைச் சேர்ந்த பாஜக எம்பி-யான சி.ஆர்.பாட்டீல் நியமிக்கப்பட்டிருக்கிறார். ஆனால், குழு நியமிக்கப்பட்டு இரண்டு வாரங்கள் ஆகியும் எந்த வேலையும் நடக்கவில்லையாம். பத்துப் பேர் அடங்கிய இந்தக் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த கனிமொழியும் மாணிக்கம் தாகூரும் இடம் பிடித்திருக்கிறார்கள். இதனால், தமிழகத்து எம்பி-க்கள் கூடுதல் வசதிகள் கொண்ட இல்லங்களை தங்களுக்கு ஒதுக்கக் கோரி இவர்கள் இருவரையும் வட்டமடிக்கிறார்களாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x