Published : 08 Jul 2015 07:58 AM
Last Updated : 08 Jul 2015 07:58 AM

மருத்துவமனையில் இருந்து பேரறிவாளன் டிஸ்சார்ஜ்

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப் பட்டிருந்த பேரறிவாளன் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன், சிறுநீரகத் தொற்று உள்ளிட்ட உடல்நலக் கோளாறு களால் அவதிப்பட்டு வந்தார். இதற்கு சிகிச்சை அளிப்பதற்காக அவர் சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பேரறி வாளனுக்கு பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இறுதியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் செய்யப்பட்ட பரிசோதனையில் சிறுநீரகத் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை சிறுநீரக வியல் துறையில் பேரறிவாளன் கடந்த 1-ம் தேதி சேர்க்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். உடல்நிலை யில் முன்னேற்றம் ஏற்பட்டதை யடுத்து, மருத்துவமனையில் இருந்து நேற்று பிற்பகல் 3.15 மணிக்கு அவர் டிஸ்சார்ஜ் செய்யப் பட்டார். அவரை போலீஸார் மீண்டும் புழல் சிறைக்கு கொண்டுசென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x