Published : 25 Jul 2015 08:54 AM
Last Updated : 25 Jul 2015 08:54 AM

ஆம்பூர், வாணியம்பாடியில் 144 தடை உத்தரவு வாபஸ்

ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளில் 144 தடை உத்தரவு நேற்று மாலை 6 மணியுடன் முடிவுக்கு வந்தது.

பதற்றத்தைக் குறைக் கவும், மீண்டும் வன்முறை நடக்காமல் இருக்கவும் கடந்த 6-ம் தேதி ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. இந்நிலையில், ஆம்பூரில் இப்போது அமைதியான சூழ்நிலை நிலவுவதாலும், கலவர பீதி படிப்படியாக குறைந்ததாலும் 144 தடை உத்தரவு நேற்று மாலை 6 மணியுடன் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக திருப்பத்தூர் கோட்டாட்சியர் ரங்கராஜன் அறிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x