Published : 08 Jul 2015 07:40 AM
Last Updated : 08 Jul 2015 07:40 AM
முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலையின் வீடு சென்னை தாம்பரம் அருகே மாடம்பாக்கம் தேவராஜ் நகரில் உள்ளது. தலித் எழில்மலை கடந்த 10 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு சென்றிருந்தார். நேற்று காலை 11 மணிக்கு அவர் வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். வீட்டுக்குள் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 25 பவுன் நகைகள், ரூ.3.5 லட்சம் பணம், வெள்ளி பொருட்கள் மற்றும் ஏராளமான பட்டுப்புடவைகள் திருட்டுப் போயிருந்தன.
இதுகுறித்து சேலையூர் போலீஸாரிடம் புகார் அளிக்கப் பட்டது. கைரேகை நிபுணர்களுடன் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் தடயங்களை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT