Published : 04 Jul 2015 08:47 AM
Last Updated : 04 Jul 2015 08:47 AM

தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல்: 32 படகுகள் சேதம்; பொருட்கள் பறிமுதல்

நாகை மாவட்டம், கோடியக்கரை அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர் களை இலங்கை மீனவர்கள் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில், 32 படகுகள் சேதமடைந் தன. மேலும், மீன்கள் மற்றும் பல் வேறு பொருட்களை இலங்கை மீனவர்கள் பறித்துச் சென்றதாக தமிழக மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

நாகப்பட்டினம் செருதூர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த 30-ம் தேதி 200-க்கும் மேற் பட்ட ஃபைபர் படகுகளில் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர். அவர் கள் கோடியக்கரைக்கு தென் கிழக்கே இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். கடந்த ஜூலை 1-ம் தேதி இரவு 10-க்கும் மேற்பட்ட படகுகளில் அங்கு வந்த இலங்கை மீனவர்கள் 50-க்கும் மேற்பட்டோர், இலங்கை கடற்படையினரின் துணையுடன் 32 ஃபைபர் படகுகளையும் சூழ்ந்துகொண்டு, கற்களாலும், கட்டையாலும் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். தாக்குதலுக்குப் பயந்த தமிழக மீனவர்கள் அனைவரும் படகின் உள்ளே பதுங்கிக்கொண்டனர்.

பின்னர், தமிழக மீனவர்களின் படகுகளில் ஏறிய இலங்கை மீனவர்கள், அவற்றிலிருந்த வலை, ஜிபிஎஸ் கருவி, ஐஸ் கட்டிகள், செல்போன்களைக் கொள்ளையடித்ததுடன், அரிவாளைக் காட்டி மிரட்டி மீனவர்கள் அணிந்திருந்த வெள்ளிச் சங்கிலிகளையும் பறித்துக்கொண்டனர். அதுமட்டுமின்றி, மீனவர்கள் 2 நாட்களாகப் பிடித்து வைத்திருந்த மீன்களையும் கூடைகளோடு வாரிக்கொண்டு, தமிழக மீனவர்களை கடுமையாக தாக்கி, எச்சரித்துவிட்டு திரும்பியுள்ளனர். இந்த தாக்குதலில், 30-க்கும் மேற்பட்ட மீனவர்கள் காயமடைந் துள்ளனர்.

பின்னர், கரை திரும்பிய தமிழக மீனவர்கள், இதுகுறித்து கிராம பஞ்சாயத்தாரிடம் முறையிட்டனர். மேலும், இலங்கை மீனவர்களின் அத்துமீறல் குறித்து வேதாரண்யம் கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாரிடமும் புகார் அளித்தனர்.

இதுகுறித்து மீனவர்கள் கூறும்போது, “கடல் கொள்ளையர் களைப்போல இலங்கை மீனவர் கள் நடந்துகொண்டனர். அவர் களது செயல் எங்களின் வாழ்வா தாரத்தை அழிப்பதாக இருந்தது. அவர்களின் தாக்குதலுக்கு இலங்கை கடற்படையும் துணையாக இருந்தது” என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x