Published : 02 Jul 2015 07:50 AM
Last Updated : 02 Jul 2015 07:50 AM
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 181-வது வாக்குச்சாவடியில் மொத்த வாக்குகளைவிட அதிக வாக்குகள் பதிவானது. இதனால் அங்கு மறுவாக்குப் பதிவு நடத்தப்பட்டது. இதற்கு காரணமான அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையம் சார்பில் கல்வித் துறைக்கு பரிந்துரை செய்துள்ளோம்.
தொகுதிக்கு தொடர்பில்லாத நபர்கள் கள்ள ஓட்டு போட்டதாக ஆதாரங்களுடன் இதுவரை எந்தப் புகாரும் வரவில்லை. ஆனாலும், பத்திரிகைகளில் வந்த செய்திகளின் அடிப்படையில் நடந்த விவரங் களை தலைமைத் தேர்தல் ஆணை யத்துக்கு அனுப்பியுள்ளோம்.
சேலம் காவல் உதவி ஆணையர் கணேசன் என்பவர், ஆர்.கே.நகரில் பிரச்சாரம் செய்ததாக புகார் வந்தது. இது தொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அதற்கு, மருத்துவ விடுப்பில் இருப்பதாகவும், ஆர்.கே.நகர் தொகுதிக்கு சென்றது உண்மைதான் என்றும், பிரச்சாரம் செய்யவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். மருத்துவ விடுப்பில் இருக்கும் காவல் அதிகாரி, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் இடத்துக்கு செல்வது தவறான செயலாகும். எனவே, இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு சந்தீப் சக்சேனா கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT