Published : 21 Jul 2015 08:04 AM
Last Updated : 21 Jul 2015 08:04 AM
கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட் டது. சென்னை மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூ னிஸ்ட் மாநில துணைச் செயலாளர் கே.சுப்பராயன், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் லிபரேசன் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலசுந்தரம், எஸ்யுசிஐ மாநிலச் செயலாளர் ஏ.ரங்கசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் டி.கே.ரங்க ராஜன் பேசியதாவது:
ஊழல், வகுப்புவாதம், பொரு ளாதாரச் சீரழிவு ஆகிய மூன்று அபாயங்கள் நம் தேசத்தை சூழ்ந் துள்ளன. ஊழலற்ற ஆட்சியை நடத்தியதாக பெருமை பேசிய பாஜகவினரின் உண்மை முகம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் வியாபம் தேர்வு வாரிய ஊழல், சத்தீஸ்கரில் ரேஷன் ஊழல், மகாராஷ்டிரத்தில் 2 அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு, இந்தியாவில் தேடப் படும் குற்றவாளியான லலித் மோடிக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா ஆகியோர் உதவி யது என்று பாஜகவின் ஊழல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
பாஜக அரசின் வகுப்புவாத செயல்களால் சிறுபான்மையினர் அச்சமடைந்துள்ளனர். நவீன பொருளாதாரக் கொள்கைகளை காங்கிரஸைவிட வேகமாக நடை முறைப்படுத்துவதால் சாதாரண மக்களுக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் கிரானைட், தாதுமணல், ஆற்று மணல் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப் படுகின்றன. திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. இதையெல்லாம் மக்க ளிடம் அம்பலப்படுத்தி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் இவ்வாறு டி.கே.ரங்கராஜன் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT