குரூப்-2 தேர்வு ரத்து விவகாரம்: 5 அதிகாரிகள் இடைநீக்கம்

துணை செயலர் மீது ஒழுங்கு நடவடிக்கை
டிஎன்பிஎஸ்சி
டிஎன்பிஎஸ்சி
Updated on
1 min read

சென்னை: தேர்வு மைய ஒதுக்​கீடு குளறு​படி​யால் தமிழகம் முழு​வதும் டிஎன்​பிஎஸ்சி குரூப்-2 மெயின் தேர்வு ரத்து செய்​யப்​பட்ட விவ​காரத்​தில், சார்​பு-செயலர் உள்​ளிட்ட 5 அதி​காரி​கள் இடைநீக்​கம் செய்​யப்​பட்​டுள்​ளனர். ஒரு துணை செயலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது.

சார்​-ப​தி​வாளர், உதவி தொழிலா​ளர் ஆய்​வாளர், சிறைத்துறை நன்​னடத்தை அலு​வலர், முது​நிலை வருவாய் ஆய்​வாளர் உள்ளிட்ட பதவி​களுக்கான குரூப்-2 மற்​றும் குரூப்​-2ஏ மெயின் தேர்​வு​கள் கடந்த பிப்​.8-ம் தேதி நடக்க இருந்​தன.

தமிழகத்​தின் மற்ற பகு​தி​களில் தேர்​வு​கள் தொடங்​கிய நிலை​யில், சென்​னை​யில் அரும்​பாக்​கம் டி.ஜி.வைஷ்ணவா கல்​லூரி, நந்​தனம் அரசு கலைக் கல்​லூரி ஆகிய மையங்​களில் தேர்​வர்​களுக்கு இடங்​கள் ஒதுக்​கு​வ​தில் குளறு​படி ஏற்​பட்​டது. இதன் காரண​மாக, தமிழகம் முழு​வதும் தேர்வு ரத்து செய்​யப்​பட்​டது.

இதற்கு, அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் கடும் கண்​டனம் தெரி​வித்​தனர். இந்​நிலை​யில், இந்த விவ​காரத்​தில் எடுக்​கப்​பட்​டுள்ள நடவடிக்கை தொடர்​பாக டிஎன்​பிஎஸ்சி செயலர் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பு: கடந்த பிப்​.8-ம் தேதி நடக்க இருந்த ஒருங்​கிணைந்த குரூப்​-2, குரூப்​-2ஏ மெயின் தேர்​வு​கள் தொழில்​நுட்​பக் காரணங்​களால் ரத்து செய்​யப்​பட்​டன. இந்த தேர்​வு​களை மார்ச் 15-ம் தேதி காலை மற்​றும் பிற்​பகலில் மீண்​டும் நடத்த திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

தேர்​வு​கள் ரத்து செய்​யப் ​பட்​டது தொடர்​பாக விரி​வான விசா​ரணை நடத்​தப்​பட்​டு, தொடர்பு உடைய​வர்​கள் மீது நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று தெரிவிக்​கப்​பட்​டது. அதைத் தொடர்ந்​து, முதல்கட்ட விசா​ரணை​யின் அடிப்​படை​யில், ஒரு உதவி பிரிவு அலு​வலர், ஒரு புரோகி​ராமர், 2 பிரிவு அலு​வலர்​கள், ஒரு சார்​பு-செயலர் ஆகியோர் தற்​காலிக பணிநீக்​கம் செய்​யப்​பட்​டுள்​ளனர். ஒரு துணைச் செயலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது. இனிவரும் காலங்​களில் இது​போன்ற தவறுகள் நடை​பெறாமல் இருக்க கூடு​தல் வழி​முறை​கள் செயல்​படுத்​தப்​பட்​டுள்​ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in