Published : 17 Jul 2015 08:57 AM
Last Updated : 17 Jul 2015 08:57 AM
சுமார் 2 கிலோ தங்க நகைகளை ஆடைக்குள் மறைத்து துபாயில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திய இலங்கை பெண் கைது செய்யப்பட்டார்.
துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு நேற்று அதிகாலை ஒரு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்து வெளியே அனுப்பினர். அப்போது ஒரு பெண் பயணி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து, தனி அறைக்கு அழைத்துச் சென்று அவரிடம் சோதனை நடத்தப்பட்டது. 1 கிலோ 900 கிராம் எடையுள்ள தங்க நகைகளை அவர் தனது ஆடைக்குள் மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த பெண் கைது செய்யப்பட்டார். ஜுவாரியா என்ற அந்த பெண் இலங்கையை சேர்ந்தவர். அவரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT