Published : 11 Jul 2015 09:12 AM
Last Updated : 11 Jul 2015 09:12 AM

உளுந்தூர்பேட்டை அருகே நள்ளிரவில் இன்ஸ்பெக்டர் உட்பட 4 போலீஸார் சிறைபிடிப்பு

விழுப்புரம் மாவட்டம் உளுந் தூர்பேட்டை அடுத்துள்ள கூவாகம் கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரும், அதே கிராமத்தைச் சேர்ந்த தற்போது சென்னையில் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றும் இளம் பெண் ஒருவரும் சில ஆண்டு களாக காதலித்து வந்தனராம். இவர்களின் காதல் அந்த பெண் ணின் குடும்பத்துக்கு தெரிய வந்தது. இதையடுத்து, அப்பெண் ணுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வருகிற திங்கள்கிழமை நிச்சயம் செய்ய முடிவெடுத்திருந்தனர். இதை யறிந்த காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறினர்.

இந்நிலையில், இளைஞரின் உறவினர்கள் சிலர் மட்டும் அந்த கிராமத்தில் வசித்து வருகின்றனர். அவர்கள் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி திருநாவலூர் போலீஸில் புகார் மனு அளித்தனர். இதையடுத்து, அந்த கிராமத்தில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, கூவாகம் கிராமத்தில் கோயில் அருகே நேற்று முன்தினம் இரவில் வயலுக்கு நீர் பாய்ச்ச செல்பவர்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஜீப்பில் வந்த திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் மற்றும் போலீஸார் அவர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில், அந்த ஊரைச் சேர்ந்த சேகர் உட்பட 15 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர்களை போலீஸ் ஜீப்பில் ஏற்ற முயன்றனர். இதுகுறித்து தகவலறிந்த கிராம மக்கள் விரைந்து வந்து போலீஸாருடன் ஜீப்பை சிறைப்பிடித்தனர். இதுபற்றி மாவட்டக் காவல்துறை அலுவல கத்துக்கு தகவல் கூறப் பட்டது. உடனே உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி சங்கர் தலைமையிலான போலீஸார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இன்ஸ்பெக்டர் உட்பட 4 போலீஸார் மற்றும் ஜீப்பை மீட்டனர்.

தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் அந்த கிராமத்தில் போலீஸார் குவிக்கப் பட்டுள்ளனர். இது குறித்து பொதுமக்கள் கூறும்போது ஜீப்பில் வந்த போலீஸார் குடிபோதையில் தாக்கியதாக தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x