ரியல் எஸ்டேட் தொழிலதிபரை ஏமாற்றி மோசடி: ரூ.17 லட்சம் பறித்த சினிமா இயக்குநர் உட்பட 3 பேர் சிக்கினர்

ரியல் எஸ்டேட் தொழிலதிபரை ஏமாற்றி மோசடி: ரூ.17 லட்சம் பறித்த சினிமா இயக்குநர் உட்பட 3 பேர் சிக்கினர்
Updated on
1 min read

ஆவடி, ஸ்ரீதேவி நகரைச் சேர்ந்தவர் ராஜ்குமார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவரிடம் பட்டாபிராமைச் சேர்ந்த வழக்கறிஞர் சிகாமணி தொழிலில் உதவி செய்து கமிஷன் பெற்று வந்தார். இவர் சினிமா தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ராஜ்குமாரிடம் அதிக பணம் இருப்பதை அறிந்து அதை நூதனமான முறையில் ஏமாற்றிப் பறிக்க சிகாமணி திட்டமிட்டார். இதற்காக திரைப்பட உதவி இயக்குநர் செந்தில் என்பவரின் உதவியை நாடினார். அவர்களின் திட்டப்படி, செந்தில் ராஜ்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

இதை சிகாமணியிடம் தெரி வித்த ராஜ்குமார் தனக்கு உதவும்படி கேட்டுக்கொண்டார். இதற்கு அவர், ஆவடியைச் சேர்ந்த சீனிவாசன் என்ற திரைப்பட இயக்குநர் இருக்கிறார். அவருக்கு காவல்துறையைச் சேர்ந்த உயரதிகாரிகளை தெரியும். அவர்களை வைத்து கொலை மிரட்டல் விடுத்தவரை கண்டு பிடித்துவிடலாம். அதற்கு பணம் செலவாகும் எனக்கூறி கணிச மான பணத்தையும் பெற்றுக் கொண்டார்.

இந்நிலையில், சமீபத்தில் ராஜ்குமாரை தொடர்பு கொண்ட சிகாமணி, “உங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை மணிமங்கலம் அருகே கடந்த ஏப்ரல் 18-ம் தேதி கொலை செய்து விட்டோம். அப்பகுதி காவல் துறை அதிகாரிகள் உதவியுடன் அந்த கொலையை சாலை விபத்தாக மாற்றிவிட்டோம். இதற்காக காவல் துறை அதிகாரிகளுக்கும் பணம் கொடுக்க வேண்டியுள்ளது” எனக் கூறி மீண்டும் ராஜ்குமாரிடம் பணம் பெற்றுள்ளார்.

அதன் பிறகு, “வாலிபரைக் கொன்றது அவரது பெற்றோ ருக்கு தெரிந்துவிட்டது. எனவே அவர்களை சரிக்கட்ட அவர் களுக்கும் பணம் கொடுக்க வேண் டும்” எனக் கூறி ராஜ்குமாரிடம் பணம் பெற்றனர். இதுவரை 17.44 லட்சம் ரூபாய் வரை பறித்துள்ளனர்.

இந்நிலையில், இருவருக்கு மட்டுமே தெரிந்த ராஜ்குமாரின் புதிய செல்போன் எண்ணுக்கு மீண்டும் செந்தில் தொடர்பு கொண்டு, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் சந்தேக மடைந்த ராஜ்குமார், தன் நண்பர் ஒருவர் மூலம், மணிமங்கலத்தில் நடந்த சம்பவம் குறித்து விசாரித் தார். விசாரணையில் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து ராஜ்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய ஆவடி போலீஸார் சிகாமணி, சீனிவாசன், செந்தில் ஆகிய 3 பேரை நேற்று முன் தினம் இரவு கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in