Published : 11 Mar 2014 10:30 AM
Last Updated : 11 Mar 2014 10:30 AM
சென்னையில் இயங்கும் சிறிய பஸ்களில் இருப்பது அதிமுகவின் தேர்தல் சின்னமான ‘இரட்டை இலை’தானா என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாக உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சிறிய பஸ்கள் மற்றும் அம்மா குடிநீர் பாட்டில்களில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவின் படம், அதிமுக தேர்தல் சின்னமான இரட்டை இலை ஆகியவற்றை அகற்ற உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மனு செய்துள்ளார்.
இந்த மனு நீதிபதி டி.ராஜா முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன் ஆஜராகி, பதில் மனு தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறும்போது, ‘அம்மா குடிநீர் பாட்டில்களில் முதல்வர் ஜெயலலிதாவின் படங்களை அகற்றுவது உள்ளிட்ட பல நடவடிக்கைகளை ஏற்கெனவே செய்து வருகிறோம் என்றார்.
இதையடுத்து விசாரணையை வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT