Published : 27 Jul 2015 09:19 AM
Last Updated : 27 Jul 2015 09:19 AM
திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று அறிவித்ததற்காக திமுக தலைவர் கருணாநிதியை மதுவிலக்கை வலியுறுத்தி வரும் இருவேறு இயக்கத்தினர் நேற்று சந்தித்து நன்றி கூறினர்.
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தால் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்தார். இதற்கு மதுவிலக்கு ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பு பெருகி வரு கிறது. இந்த அறிவிப்புக்காக திமுக தலைவர் கருணாநிதியை காந்திய வாதி சசிபெருமாள் சமீபத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து தென்னிந்திய காந்திய கிராம நிர்மாண சேவா தளத்தின் தலைவர் வி.விவேகானந்தன் மற்றும் மதுபோதைக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வினோத் ஆகியோர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் நேற்று மாலை 6.30 மணியளவில் சந்தித்து நன்றி கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT