Published : 24 Jul 2015 07:40 AM
Last Updated : 24 Jul 2015 07:40 AM

வட சென்னையில் திடீர் மழை

சென்னையின் வடக்கு பகுதிகளில் நேற்று மழை பெய்தது.

வெப்பச் சலனம் காரணமாக சென்னையில் மழை பெய்து வருகிறது. நகரில் நேற்று முன் தினம் மாலை சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்தது. அதேபோல், நேற்று மாலை வட சென்னை பகுதிகளில் திடீரென மழை பெய்தது.

மாலை 5.30 மணியளவில் பெய்ய ஆரம்பித்த மழை சிறிது நேரம் தொடர்ந்தது. எழும்பூர், புரசைவாக்கம், பாரிமுனை உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்தது. நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், சேப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்யாவிட்டாலும், வானம் இருண்டு காணப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தின் சில பகுதிகளிலும் திருத்தணியிலும் மழை பெய்தது.

ஜூன் 1-ம் தேதி முதல் இது வரை சென்னை நுங்கம்பாக்கத்தில் 148 மி.மீ மழையும், மீனம்பாக்கத்தில் 149 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x