Published : 09 Jul 2015 09:40 PM
Last Updated : 09 Jul 2015 09:40 PM
தேசிய கீதத்தை திருத்துவதை நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''பாஜக மூத்த தலைவரும், ராஜஸ்தான் மாநில ஆளுநருமான கல்யாண் சிங் தேசிய கீதத்தில் மாற்றம் தேவை என்று கூறியுள்ளார். அது ஏற்புடையதல்ல. அது மகாகவி ரவீந்திரநாத் தாகூரின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் செயலாகும்.
தேசிய கீதத்தில் ஆங்கிலேயரை புகழும்படியான வார்த்தைகள் உள்ளதாக கல்யாண் சிங் கூறியுள்ளார். இந்த சர்ச்சை ஏற்கனவே எழுந்த போது, அதில் துளியும் உண்மை இல்லை என்று ரவீந்திரநாத் தாகூர் 1937-ம் ஆண்டிலேயே தெளிவுபடுத்தினார்.
கல்யாண் சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்தை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்தக் கருத்து குறித்து கல்யாண் சிங் உரிய விளக்கம் தர வேண்டும். மேலும் இது போன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்'' என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT