Published : 30 Jul 2015 08:49 AM
Last Updated : 30 Jul 2015 08:49 AM
மறைந்த அப்துல் கலாமின் இறுதி சடங்கில் கலந்து கொள்வோருக்கு வசதியாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்கவுள்ளது.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் இறுதி சடங்கு ராமேசுவரத்தில் இன்று நடக் கிறது. நாடு முழுவதும் இருந்து அரசியல் தலைவர்கள், விஞ்ஞானிகள், முக்கிய பிரமுகர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வரு கின்றனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொது மக்கள் அஞ்சலி செலுத்த செல்கின்றனர். பொது மக்கள் அப்துல் கலாமின் இறுதி சடங்கில் பங்கேற்கும் வகையில் சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக விரைவு போக்குவரத்து கழக உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, ‘‘அப்துல் கலாமின் இறுதிசடங்கில் பங்கேற்க செல்லும் மக்களின் வசதிக்காக போதிய அளவில் சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக சென்னை கோயம்பேட்டில் இருந்தும், மதுரையில் இருந்தும் ராமேசுவரத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT