Published : 16 Jul 2015 08:19 AM
Last Updated : 16 Jul 2015 08:19 AM
மெட்ரோ ரயில் பணியில் இருந்து நீக்கப்பட்ட கேமின் நிறுவனம் இதுவரை மேற்கொண்ட பணிகள் குறித்து அதிகாரிகள் நேற்று நேரில் ஆய்வு செய்தனர். புதிய டெண்டர் இம்மாத இறுதியில் விடப்பட உள்ளது.
சென்னையில் 2 மார்க்கங்களில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்துவருகின்றன. மே தின பூங்காவில் இருந்து சைதாப்பேட்டை வரையிலான பணிகளை ‘கேமின்’ நிறுவனம் மேற்கொண்டு வந்தது. திட்டமிட்ட காலத்துக்குள் பணிகளை மேற்கொள்ளாததால் பணியில் இருந்து இந்நிறுவனம் நீக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மே தின பூங்காவில் இருந்து சைதாப்பேட்டை வரையிலான மெட்ரோ ரயில் பணிகள் நிறுத்தப்பட்டன.
சுரங்கம் தோண்டுவது, ரயில் நிலையங்கள் அமைப்பது ஆகிய பணிகளை கேமின் நிறுவனம் இதுவரை எவ்வளவு முடித்துள்ளது என மெட்ரோ ரயில் அதிகாரிகள் குழுவினர் நேரில் சென்று முழுமையாக ஆய்வு நடத்தினர்.
இதுபற்றி மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் மேலும் கூறியபோது, ‘‘ஆய்வின் அடிப்படையில் அறிக்கை தயாரித்து மீண்டும் டெண்டர் விடுவதற்கான பணிகள் நடந்துவருகின்றன. இம்மாத இறுதியில் டெண்டர் விடப்படும். ஒருசில மாதங்களில் நிறுவனம் தேர்வு செய்யப்படும். ஒட்டுமொத்த பணிகளையும் அடுத்த 18 மாதங்களில் முடிக்க திட்டமிட்டுள்ளோம். ரூ.2,000 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளில் ரூ.1,200 கோடிக்கான பணிகள் முடிந்துள்ளன. எஞ்சியுள்ள ரூ.800 கோடிக்கான பணிகளை 2017 ஜூலைக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT