Published : 02 Jul 2015 07:36 AM
Last Updated : 02 Jul 2015 07:36 AM

அரசு பொது மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதி

ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பேரறிவாளனுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன், சிறுநீரகத் தொற்று உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து சிகிச்சை அளிப்பதற்காக, அவர் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பேரறிவாளனுக்கு பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதில் அவருக்கு சிறுநீரகத் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை சிறுநீரக இயல் துறையில் பேரறிவாளன் நேற்று அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். பேரறிவாளன் அனுமதிக்கப்பட்டுள்ள வார்டு மற்றும் மருத்துவமனை வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x