Published : 12 Jun 2015 09:02 AM
Last Updated : 12 Jun 2015 09:02 AM
தஞ்சாவூர் அருகே விஷ வண்டு கள் கொட்டியதில் 2 பேர் உயிரிழந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகில் உள்ள மைக்கேல்பட்டி கிராமத்தில் சாலையோர மரம் ஒன்றில் கதண்டு வண்டுகள் கூடு கட்டியிருந்தன.
நேற்று காலை அந்த சாலையில் சென்றவர்களை துரத்தித் துரத்தி வண்டுகள் கொட்டியதில் 13 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டு, திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில், மைக்கேல்பட்டி கிறிஸ்தவ தெருவைச் சேர்ந்த தியாகராஜன் மனைவி சிவானந்தம் (60), அந்தோணிசாமி மகன் இருதயராஜ்(70) ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
தீயணைப்பு மீட்புப் படையினர் மூலம் அந்த கூட்டையும், வண்டு களையும் அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT