Published : 19 Jun 2015 08:15 AM
Last Updated : 19 Jun 2015 08:15 AM

சென்னையில் 2 நாட்கள் மழை தொடரும்

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச் சலனம் காரணமாக சென்னையில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து கொண்டிருக்கிறது. தாம்பரம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு நல்ல மழை பெய்துள்ளது. சைதாப்பேட்டை, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், சேப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரத்தில் லேசான மழை பெய்தது. ஆனால், நேற்று காலை யிலேயே சென்னையின் பல இடங்களில் லேசான தூரல் ஆரம்பித்துவிட்டது. மதிய வேளையில் குரோம்பேட்டை, மீனம்பாக்கம், அடையாறு, கிண்டி, தி.நகர், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்தது. மழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாயினர்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் நேற்று 0.2 மி.மீ., மீனம்பாக்கத்தில் 0.1 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. நேற்று முன் தினம் நுங்கம்பாக்கத்தில் 3.8 மி.மீ., மீனம்பாக்கத்தில் 4.8 மி.மீ. மழை பதிவாகியது.

அடுத்த 2 நாட்களுக்கு சென்னையில் மழை தொடர்ந்து பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் ஒரு சில இடங்களில் மழை பெய்யக் கூடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x