Published : 08 Jun 2015 01:05 PM
Last Updated : 08 Jun 2015 01:05 PM

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட பாஜக தயக்கம்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது அவசியமில்லை என பாஜக கூட்டணி கருதுகிறது என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை தி.நகரில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தராஜன், "ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது அவசியமில்லை என பாஜக கூட்டணி கருதுகிறது.

தேர்தலில் போட்டியிட பாஜகவுக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் எந்தவிதமான அச்ச உணர்வும் இல்லை. ஆனால், இடைத்தேர்தல் நடைபெறுமா என்ற சந்தேகம் இருக்கிறது.

தேர்தல் ஆணையம் நடுநிலை உணர்வோடு செயல்படவில்லை. இந்த நிலையில், தேர்தலில் அவசியம் போட்டியிட வேண்டுமா என பாஜக பரிசீலித்து வருகிறது. கூட்டணி கட்சிகளுடன் ஆலோசித்து விரைவில் முடிவு எட்டப்படும்" என்றார்.

வரும் 27-ம் தேதி ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் அதிமுக சார்பில் முதல்வர் ஜெயலலிதா போட்டியிடுகிறார். திமுக, மதிமுக, பாமக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக காங்கிரஸ் போன்ற கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.

இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது அவசியமில்லை என பாஜக கூட்டணி கருதுகிறது என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x