Published : 03 Jun 2015 07:49 AM
Last Updated : 03 Jun 2015 07:49 AM
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் கஞ்சா கடத்தல் வழக்கு தொடர்பாக மத்திய ரிசர்வ் காவல் படை (சிஆர்பிஎஃப்) போலீஸ்காரர் நேற்று கைது செய்யப்பட்டார்.
சீர்காழியைச் சேர்ந்தவர் சேகர் (எ) சந்திரசேகர்(43). இவர், டெல்லியில் சிஆர்பிஎஃப் போலீஸ்காரராகப் பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு மத்திய உளவுப் பிரிவுக்கு மாற்றல் செய்யப்பட்டு, வேதாரண்யம் பகுதியில் பணியாற்றினார். பின்னர், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மீண்டும் அவர் டெல்லி சிஆர்பிஎஃப்-க்கு மாற்றல் செய்யப்பட்டார். எனினும், டெல்லி செல்லாமல் வேதாரண்யத்திலேயே அவர் தங்கியிருந்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற வழக்கு தொடர்பாக சந்திரசேகரை வேட்டைக்காரனிருப்பு போலீஸார் நேற்று கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT