Published : 13 Jun 2015 10:53 AM
Last Updated : 13 Jun 2015 10:53 AM
அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்களுக்கு இடமாற்றலுக்கான கலந்தாய்வு கடந்த மே 27-ந் தேதியும், அரசு பொறியியல் கல்லூரி பேராசிரியர்களுக்கு 28-ந் தேதியும் சென்னையில் நடத்தப்பட்டது வழக்கமாக கலந்தாய்வு முடிவடைந்ததும் உடனடியாக இடமாற்றல் உத்தரவு வழங்கப்பட்டுவிடும்.
ஆனால், இந்த ஆண்டு கலந்தாய்வு முடிந்து 2 வாரங்கள் ஆகியும் இன்னும் இடமாற்றலுக்கான உத்தரவு வழங்கப்படாததால் கலந்தாய்வில் கலந்துகொண்ட விரிவுரையாளர்களும், பேராசிரியர்களும் கவலை அடைந்தனர். தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக தாமதமாகிறதோ என்று அவர்கள் நினைத்தனர்.
இந்த நிலையில், மாநில தொழில்நுட்பக்கல்வி ஆணையர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வரும் உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா, இடமாற்றம் பெற்ற அரசு பாலிடெக்னிக், அரசு பொறியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு உடனடியாக இடமாற்றல் ஆணை வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT