Published : 04 Jun 2015 08:04 AM
Last Updated : 04 Jun 2015 08:04 AM
தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள ஜெயலலிதாவுக்கு மக்களவை தலைவர் சுமித்ரா மகாஜன் மற்றும் மாநிலங்களவை துணைத்தலைவர் பி.ஜெ.குரியன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சுமித்ரா மகாஜன் அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியில், “தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றுள்ள உங்களுக்கு என் வாழ்த்துகள். உங்கள் தலைமையில் தமிழகம் மென்மேலும் வளம் பெறுவதுடன், மக்களின் எதிர்பார்ப்புகளும் நிறைவேறும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
பி.ஜெ.குரியன் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், “தமிழகத்தின் முதல்வராக மீண்டும் பொறுப்பேற்றுள்ளதற்கு எனது வாழ்த்துகள். நீதித்துறை மீது தமிழக மக்கள் வைத்திருந்த நம்பிக்கை காப்பாற்றப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT