Published : 30 Jun 2015 07:28 AM
Last Updated : 30 Jun 2015 07:28 AM

திரையரங்கம்போல் காட்சியளித்த மெட்ரோ ரயில் வளாகம்

மெட்ரோ ரயிலின் முதல் நாள் பயணத்துக்காக கோயம்பேடு ஆலந்தூர் இடையேயான அத் தனை ரயில் நிலைய வாயில் களிலும் திரையரங்க வளாகத்தில் காத்திருப்பதுபோல் பொதுமக்கள் திரண்டிருந்தனர். அரும்பாக்கம், வடபழனி, அசோக் நகர், ஈக் காட்டுத்தாங்கல் உள்ளிட்ட நிலை யங்களில் பொதுமக்கள் திரண்டி ருந்தனர்.

மெட்ரோ ரயில் புறப்படுவதற்கு முன்பு ரயில் நிலையங்களின் நுழைவு வாயில்கள் மூடப்பட்டிருந் தன. இதனால் நுழைவுக் கதவருகே பொதுமக்கள் கூட்டமாக திரண்டிருந்தனர். பின்னர் ரயில் வருவதற்கு 10 நிமிடம் முன்பாக கதவு திறந்து விடப்படவே, முதல் நாள் காட்சிக்கு திரையரங்குக்குள் நுழைபவர்கள் போல் பொது மக்கள் முண்டியடித்துக் கொண்டு ரயில் நிலையத்துக்குள் சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x