Published : 18 Jun 2015 07:37 AM
Last Updated : 18 Jun 2015 07:37 AM
நடிகர் பூச்சிமுருகனுக்கு எதிரான தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மனுவை தள்ளுபடி செய்து சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சொத்துகளை குத்தகைக்கு விட்டது தொடர்பாக சங்க நிர்வாகிகளிடம் சங்க உறுப்பினர் நடிகர் பூச்சிமுருகன் விளக்கம் கேட்டார். அதனால் சங்கத்தில் இருந்து அவர் நீக்கப் பட்டார். இந்நிலையில், கடந்த 2013-ம் ஆண்டு நடந்த சங்கப் பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ள தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி சிட்டி சிவில் நீதிமன்றத்தில் பூச்சிமுருகன் வழக்கு தொடர்ந்தார். அதன்படி அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை நீதிபதி தனசேகரன் நேற்று விசாரித்தார். அப்போது தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் வழக்கறிஞர் யாரும் ஆஜராகவில்லை. பூச்சிமுருகன் சார்பில் வழக்கறிஞர் திப்புசுல்தான் ஆஜராகி, மேல்முறையீடு மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரினார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT