Published : 18 Jun 2015 07:34 AM
Last Updated : 18 Jun 2015 07:34 AM

கோயம்பேடு மார்க்கெட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

லாரி மோதி தொழிலாளி உயிரிழந்ததைத் தொடர்ந்து கோயம்பேடு மார்க்கெட்டில் நடைபாதையோரம் தடுப்புகள் ஏற்படுத்தி, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.

கோயம்பேடு மார்க்கெட்டில் சில நாட்களுக்கு முன்பு நடந்த விபத்தில் தொழிலாளி ஒருவர் லாரி மோதி பலியானார். இதைத்தொடர்ந்து, “நடைபாதையில் ஆக்கிரமிப்பு கடைகள் இருப்பதால், மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் லாரி செல்லும் பாதை வழியே செல்ல வேண்டியுள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி, நடைபாதையில் தொழிலாளிகள் செல்ல வழிவகை செய்ய வேண்டும்” என்று தொழிலாளர்கள் வலியுறுத்தி வந்தனர்.

தொழிலாளர்களின் கோரிக்கையைத் தொடர்ந்து மார்க்கெட் நிர்வாகக் குழு சார்பில் கோயம்பேடு மார்க்கெட்டின் 7 மற்றும் 14-வது நுழைவு வாயிலில் அமைந்துள்ள நடைபாதையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும் நடைபாதையில் இருந்த ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டு வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x