Published : 02 Jun 2015 07:53 AM
Last Updated : 02 Jun 2015 07:53 AM

நீதிமன்றங்களில் செயல்படும் உணவகங்களில் அசைவ உணவுக்கு அனுமதி கோரி வழக்கறிஞர்கள் முட்டை பிரியாணி விற்பனை: உயர் நீதிமன்ற கிளையில் நூதன போராட்டம்

தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் இருக்கும் உணவகங்களில் அசைவ உணவு விற்பனை செய்ய அனுமதி கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முட்டை பிரியாணி விற்பனை செய்து வழக்கறிஞர்கள் நூதன போராட்டம் நடத்தினர்.

சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை மற்றும் பிற நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், பொதுமக்களுக்கான உணவகங்கள் இயங்கி வருகின் றன. இந்த உணவகங்களில் சைவ உணவு மட்டும் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற உணவகங்களில் அசைவ உணவு விற்பனை செய்ய அனுமதி கோரி வழக்கறிஞர்கள் பல ஆண்டுகளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அசைவ உணவு விற்க அனுமதி கோரி தலைமை நீதிபதியிடம் மனு அளித்தனர். அந்த மனு நிலுவையில் உள்ள நிலையில் வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்ற மதுரை கிளை வளாகத்தில் முட்டை பிரியாணி விற்பனை செய்யும் நூதன போராட்டத்தை நேற்று பிற்பகல் நடத்தினர்.

மூத்த வழக்கறிஞர் பி.ரத்தி னம் தலைமையில் சக வழக்கறி ஞர்களுக்கு முட்டை பிரியாணி விற்பனை செய்யப்பட்டது.

இது தொடர்பாக வழக்கறிஞர் பி.ரத்தினம், ‘தி இந்து’விடம் கூறியதாவது: உச்ச நீதிமன்றம், டில்லி உயர் நீதிமன்ற உணவகங் களில் அசைவ உணவு விற்பனை செய்யப்படுகிறது. சென்னை உயர் நீதிமன்றம், மதுரை கிளையில் நீதிபதிகளுக்கான உணவகத்தில் அசைவ உணவு கிடைக்கிறது. ஆனால், வழக்கறிஞர்கள், பொது மக்களுக்கான உணவகங்களில் அசைவ உணவு விற்க அனுமதி வழங்கப்படவில்லை.

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக் கப்படவில்லை. எனவே, இப் போராட்டத்தை நடத்த முடிவு செய் தோம். தமிழகத்தில் அனைத்து நீதிமன்ற வளாகங்களில் உள்ள உணவகங்களில் அசைவ உணவு விற்பனை செய்ய அனுமதி வழங்கி உத்தரவிடும் வரை இப்போராட்டம் தொடரும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x