Published : 02 Jun 2015 07:31 AM
Last Updated : 02 Jun 2015 07:31 AM

பாட நூல்கள் விநியோகம்

திருவள்ளூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகள், அரசு உதவிப் பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் உள்ளிட்ட 2,019 பள்ளிகள் செயல்படுகின்றன. இந்தப் பள்ளிகளில் பெரும்பாலானவை கோடை விடுமுறைக்குப் பின் நேற்று திறக்கப்பட்டன.

இதில், 1,070 தொடக்கப் பள்ளிகள், 298 நடுநிலைப் பள்ளிகள், 282 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என மாவட்டம் முழுவதும் உள்ள 1,650 அரசுப் பள்ளிகள், ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள், நகராட்சிப் பள்ளிகள், ஆதிதிராவிட நலப் பள்ளிகள், அரசு உதவிப் பெறும் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. இந்த பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே மாணவ- மாணவிகளுக்கு அரசு சார்பில் விலையில்லா பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள் வழங்கப்பட்டதாக மாவட்ட கல்வித் துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x