Published : 21 Jun 2015 09:18 AM
Last Updated : 21 Jun 2015 09:18 AM
தமிழகத்தில் 2016 சட்டப்பேரவை தேர்தலிலும் அதிமுக வுக்கு, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சித் தலைவரும், தென்காசி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஆர்.சரத்குமார் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் செய்தியாளர் களிடம் நேற்று அவர் கூறியதாவது:
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவு கேட்டு 3 நாள் பிரச்சாரம் செய்கிறேன். அவருக்கு இத்தொகுதியில் 90 சதவீத வாக்குகள் கிடைக்கும். தமிழகத்தில் தற்போது நல்லாட்சி நடைபெறுகிறது. எனவே, 2016 சட்டப்பேரவை தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும். அதிமுகவுக்கு சமத்துவ மக்கள் கட்சி தொடர்ந்து ஆதரவளிக்கும்.
நடிகர் சங்க பிரச்சினையில் சிலர் பேசுவது மனதுக்கு மிகவும்வேதனை அளிக்கிறது. அனைவரும் சகோதரர், சகோதரிகளாக பழகி வருகிறோம். நடிகர் சங்க தேர்தல் ஒன்றும் பெரிய மக்கள் பிரச்சினை இல்லை. இதை ஊடகங்கள் பெரிதாக்கி வருகின்றன’ என்றார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT