Published : 16 Jun 2015 08:03 PM
Last Updated : 16 Jun 2015 08:03 PM
தமிழகத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் எம்சிஏ, எம்பிஏ மற்றும் எம்இ, எம்டெக், எம்.பிளான் இடங்களை நிரப்புவதற்காக மே மாதம் 16, 17-ம் தேதிகளில் ‘டான்செட்’ பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது.
அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய இந்த நுழைவுத் தேர்வை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் எழுதியிருந்தனர். இந்த தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் இணையதளத்தில் (www.annauniv.edu) வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட்டு தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.
மதிப்பெண் பட்டியலை மேற்கண்ட இணையதளத்தில் இருந்து 19-ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம் என்றும் மதிப்பெண் பட்டியல் தபாலில் அனுப்பப்படாது என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT