Published : 22 Jun 2015 07:30 AM
Last Updated : 22 Jun 2015 07:30 AM
தேர்தல் ஆணையத்தின் உத்தர வைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட சாலை களை சீரமைக்கும் பணிகள் நிறுத் தப்பட்டுள்ளன.
ஆர்.கே.நகரின் பல இடங்களில் புதிய சாலை அமைப்பதற்காக சாலையின் மேல் பகுதியில் இருந்த தார் பகுதி பெயர்த்து எடுக்கப்பட்டிருந்தது. தேர்தல் அறிவிக்கப்பட்ட பின், அவற்றில் சாலை போடப்பட்டது. முதல்வர் ஜெயலலிதா வேட்பு மனுத்தாக்கல் செய்ய வந்த பகுதி யிலும் புதிய சாலைகள் போடப் பட்டிருந்தன.
சாலைப்பணிகள் குறித்து தேர்தல் ஆணையத்துக்கு புகார்கள் சென்றதை அடுத்து, அப்பணிகளை நிறுத்த சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் சாலைப்பணிகள் பாதியில் நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக திருவொற்றியூர் நெடுஞ்சாலை, வைத்தியநாதன் பாலம், கத்திவாக் கம் நெடுஞ்சாலை உள்ளிட்ட சில சாலைப் பணிகள் பாதியில் நிற் கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
அதிகாரி விளக்கம்
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, “தேர்தல் நடப்பதால் இப்பணிகளை மேலும் தொடர முடியாது. தேர்தல் முடிந்ததும் சாலை போடப்படும்’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT