சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்ட உற்சவம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்ட உற்சவம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
Updated on
1 min read

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயிலில் நேற்று தேரோட்டம் நடந்தது. ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று (24-ம் தேதி) ஆனித் திருமஞ்சனம் தரிசன விழா நடைபெறுகிறது.

உலக அளவில் புகழ்வாய்ந்த சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன உற்சவ விழா, கடந்த 15-ம் தேதி கொடியேற்றத் துடன் தொடங்கியது. மந்திரங்கள் முழங்க உற்சவ ஆச்சாரியார் குஞ்சிதபாத தீட்சிதர் கொடியேற் றினார். இதையடுத்து தினமும் காலை, இரவு இருவேளையும் பஞ்சமூர்த்தி வீதியுலா நடந்தது. கடந்த 19-ம் தேதி தெருவடைச்சான் விழாவும் 22-ம் தேதி இரவு தங்க குதிரை வாகனத்தில் பிச்சாடனர் வீதியுலாவும் நடைபெற்றன.

இதன் தொடர்ச்சியாக முக்கிய திருவிழாவான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. நேற்று அதிகாலை யில் வேத மந்திரங்கள் முழங்க நடராஜர், சிவகாம சுந்தரி அம்மாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் தேர்களில் எழுந்தருளினர். பின்னர், தேரில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. முதலில் விநாயகர் தேர், சுப்பிரமணியர் தேர் சென்றன. அதைத் தொடந்து நடராஜர் மற்றும் சிவகாம சுந்தரி தேரை ‘சிவ சிவ’ கோஷத்துடன் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

தேருக்கு முன்பாக திருமறைகள் ஓதிச் சென்றனர். மேலும், சிவனடியார்களின் மேள தாளத்துடன் கூடிய ஆட்டம் நடந்தது. ஒவ்வொரு வீதியிலும் சிறப்பு பூஜை நடந்தது. மேல வீதியும் வடக்கு வீதியும் சந்திக்கும் இடத்தில் பருவதராஜ குல மரபினர் சார்பாக நடராஜருக்கு பட்டு சாத்தப்பட்டது. நான்கு வீதியும் வலம் வந்து இரவில் தேர்கள் நிலையை அடைந்தன.

அதைத் தொடர்ந்து, தேரி லிருந்து சாமிகள் கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு நடராஜர், சிவகாம சுந்தரிக்கு லட்சார்ச்சனை நடைபெற்றது. அதன் தொடர்ச் சியாக, இன்று (24-ம் தேதி) அதிகாலையில் மகா அபிஷேகம் நடைபெறுகிறது. பின்பு, பிற்பகல் 2 மணியளவில் ஆனித் திருமஞ்சன தரிசன விழா நடைபெற உள்ளது. விழாவையொட்டி டிஎஸ்பி சுந்தர வடிவேல் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in