Published : 03 Jun 2015 07:37 PM
Last Updated : 03 Jun 2015 07:37 PM

சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டி

சென்னை ஆர்.கே நகர் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது. வேட்பாளர் யார் என்பதை நாளை (வியாழக்கிழமை) அறிவிக்க உள்ளனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களும் கூட்டாக ஆலோசித்து முடிவெடுத்துள்ளனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கும் என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தாராளமயம், ஊழல், வகுப்புவாதம், சமூகக் கொடுமை எதிர்த்து போட்டியிடப்போவதாக கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ளன.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் ஜெயலலிதா போட்டியிடுகிறார். சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.

திமுக, மதிமுக,பாமக,தமாகா, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் இந்த இடைத்தேர்தலைப் புறக்கணித்துள்ளன. இடதுசாரி கட்சிகள் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ அறிவிப்பு உறுதிப்படுத்தி இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x